மே 27, 1964 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் உயிர் நீத்தார். அவர் 1947 முதல் 1964 வரை தனது 74வது வயதில் இறக்கும் வரை பிரதமராக இருந்தார். அவர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார், குழந்தைகள் அவரை சாச்சா நேரு என்று அழைப்பார்கள். ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.