முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், பின்னர் 7.1 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் மியாசாகி கடற்கரையிலிருந்து 20 மைல் தொலைவில் கியூஷுவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு குறித்து தகவல் இல்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பானிய மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.