டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டில் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 73 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.