இதை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் உயிரிழந்தனர். பின்னர் தனது வீட்டுக்குள் சென்ற அந்த நபர் சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்தார். கத்தி மற்றும் துப்பாக்கியுடன் வந்த அவரை போலீசார் கைது செய்தனர். நகோணா நகர சட்டமன்ற சபாநாயகர் மகனே இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.