ஜப்பானில் 2 பேரை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது..!!

ஜப்பான்: ஜப்பானின் மையப்பகுதியில் உள்ள நகோணா என்ற இடத்தில் மர்மநபர் ஒருவர் கத்தியால் குதித்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்காசிய நாடான ஜப்பானின் நாகோனா நகரில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நேற்று, ஒரு பெண்ணை, மர்ம நபர் ஒருவர் துரத்திச் சென்றார். சிறிது துாரம் சென்றதும், அந்த பெண்ணை, அவர் கத்தியால் குத்தினார்.

இதை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் உயிரிழந்தனர். பின்னர் தனது வீட்டுக்குள் சென்ற அந்த நபர் சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்தார். கத்தி மற்றும் துப்பாக்கியுடன் வந்த அவரை போலீசார் கைது செய்தனர். நகோணா நகர சட்டமன்ற சபாநாயகர் மகனே இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்