டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றார். முதல் சுற்றில் சீனாவின் ஷி ஃபெங் லீயுடன் (23 வயது, 6வது ரேங்க்) நேற்று மோதிய எச்.எஸ்.பிரணாய் (31வயது, 10வது ரேங்க்) 21-17, 21-13 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (30 வயது, 20வது ரேங்க்), 21-13, 21-13 என நேர் செட்களில் தைவானின் டின் சென் சோவை (33 வயது, 8வது ரேங்க்) 43 நிமிடங்களில் வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீஸா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை 11-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹோபரா சயாகா – சுயிசூ யுயி இணையை ஒரு மணி, 5 நிமிடம் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.