சென்னை: ஜன.10ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது. 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டை, பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர மற்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.