ஸ்ரீநகர்: தீவிரவாத சம்பவ வழக்குகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். புல்வாமா மாவட்டத்தில் கஸ்சு, ராஜ்போரா, அவந்திபோரா மற்றும் டிரால் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாரும் இணைந்து இந்த சோதனையை நடத்தினார்கள்.