டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் எனவும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார். சிவகோடி குகைக் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி 35 பேர் காயமடைந்தனர்.