இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் செர்வான் படபால் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக தீவிர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. மேகவெடிப்பு காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவாரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஸ்ரீநகர் – லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, மறுஅறிவிப்பு வரும் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்டனர்.