ஜம்மு போலீசால் தேடப்பட்ட பிரபல போதை பொருள் கடத்தல்காரன் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரன் முகமது அயூப் ஷா என்பனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக தேடப்பட்ட பிரபல போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி முகமது அயூப் ஷா என்பவன், ஜுஹாமா மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்ற போது கைது செய்யப்பட்டான்.

லடூரா ரஃபியாபாத்தை சேர்ந்த முகமது அயூப் ஷா கைது செய்யப்பட்ட பின்னர், பாரமுல்லா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்’ என்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு