ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்கப்பட்டு; மக்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி!!

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்க, ஸ்ரீநகரில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுப்பதே எங்களின் முன்னுரிமை. இந்தியா கூட்டணியின் முன்னுரிமையும் இதுதான். தேர்தலுக்கு முன்பே இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். இருந்தாலும் பரவாயில்லை.

இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மாநில அந்தஸ்து மீட்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இடையே மிக ஆழமான உறவு உள்ளது. இங்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவ காங்கிரஸ் எப்போதும் துணைநிற்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் கடினமான, கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் வன்முறையை அகற்ற விரும்புகிறோம்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி