ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் ஷிவ்கர்க்-அஸார் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பயங்கரவாதிகளை அழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இன்று காலை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த மோதலில் நமது ராணுவத்தின் கேப்டன் தீபக் சிங், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

 

Related posts

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!