அந்த புனிதநீரால் இரவு 7 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.
அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகாதீபாரதனையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.