வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, சாலைகள் தடைப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் தெருக்களில் விழுந்துள்ளன. பெரில் புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த புயல் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஜமைக்கா மட்டுமல்லாது, கிராண்ட் கேமன், லிட்டில் கேமன் மற்றும் கேமன் ப்ராக் மற்றும் மெக்சிகோவில் உள்ள யுகடன் தீபகற்பத்தையும் இந்த புயல் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கடந்து செல்லும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜமைக்கா பிரதமர் ண்ட்ரூ ஹோல்னஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.