இலங்கை திரிகோணமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: தமிழகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் முதன்முறையாக திரிகோணமலை அருகே சம்பூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்பி சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாடிவாசல் வழியே பாய்ந்து வந்த 300க்கும் மேற்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கினர். வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தலா ₹1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Related posts

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

ரூ.3 கோடி ரொக்கம், 200 பவுன் நகை, வீட்டை மிரட்டி வாங்கிய நாம் தமிழர் பெண் பிரமுகர்: டாஸ்மாக் பார் ஊழியருடன் கள்ளக்காதலால் ரகசிய திருமணம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்