சென்னை: சென்னை சூளையில் ஜெயின் கோயில் அருகில் உள்ள இறைச்சிக் கடையை அகற்றக் கோரிய வழக்கை வாபஸ் பெற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. சட்டமோ, விதியோ தடை விதிக்காத நிலையில் கடையை அகற்ற எப்படி ஆணையிட முடியும் என கோர்ட் கேள்வி எழுப்பியது. கடையை அகற்றக் கோரி கோயிலை நிர்வகிக்கும் அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.