சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்பட்டுவிட்டது என சிறை துறை தெரிவித்துள்ளது. மத்திய சிறைகளில் மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் 2018ம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், சிறைகளில் கைதிகளின் இறப்பு அதிகரித்துள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்பட்டுவிட்டது என சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறைத்துறையின் அறிக்கையை ஏற்றுவழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.