ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பலர் அதிருப்தியில் வெளியேறி தெலுங்கு தேச கட்சியில் 3 எம்எல்ஏக்களும், ஜனசேனா கட்சியில் ஒரு எம்எல்சியும் சேர்ந்துள்ளனர். மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அதில் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி காரணமாக மேலும் பலர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் ஆந்திர அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.