அதன் பிறகு தேர்தலின் வென்று கடந்த கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார். முதல்வர் என்ற முறையில் ஜெகன் மோகனுக்கு நிர்வாக பொறுப்புகள் காரணமாக இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை ஜெகன்மோகன் ராஜினாமா செய்தார். இருப்பினும் கவர்னர் அப்துல் நசீம் புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு வரும் 12ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் இனி வெள்ளிக்கிழமை தோறும் ஐதராபாத் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.