இந்தநிலையில்,மத்திய போதைப்போருள் தடுப்பு பிரிவு நேற்று டெல்லியில் ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளது. இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை பொது இயக்குனர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கைது நடவடிக்கை விவகாரத்தில் டெல்லி போலீசார் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
ஜாபர் சாதிக்கை பொறுத்தமட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி உள்ளார். இதுதொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்குக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.