சென்னை: மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழித்து கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம். திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாகப் பெருகி வருகிறது. தங்களின் குழந்தைகளின் நெஞ்சில் பெற்றோர்களே இப்படி ஜாதி நஞ்சை-விதைக்கலாமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.