இதன்படி, நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் உதவி ஆணையர் யக்ஞ.நாராயணன் மற்றும் மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், ரூ.50 லட்சத்து 87 ஆயிரத்து 186, தங்கம் 224 கிராம், வெள்ளி 740 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.