காவலரின் மண்டையை உடைத்த ஐடி ஊழியர் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி காவல் நிலைய காவலர் சரவணன் (35), நேற்று முன்தினம் இரவு, காவலர் ஞான பிரசாத் என்பவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வியாசர்பாடி ஏ.பி கல்யாணபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ரவுடி அஜித்குமார் (27), அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். இதில், கஞ்சா போதையில் இருந்த அஜித்குமார் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த அஜித்குமார், காவலர் சரவணன் தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பினார்.

இதில், காவலர் சரவணன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அஜித்குமாருடன் வந்த அகிலேஷை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் நாவல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அகிலேஷ், பெருங்குடியில் ஐடி கம்பெனியில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும், அஜித்குமாருடன் சேர்ந்து கஞ்சா புகைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் அகிலேஷை கைது செய்தனர். தப்பிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Related posts

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை