டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியரசு தலைவர் உறுதி அளித்துள்ளார் என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் மனு அளித்துள்ளனர். மணிப்பூர் சென்று வந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அங்குள்ள நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கினர்.