அப்போது அவர், மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு பெற என்னென்ன உயர் கல்வி படிக்கலாம், என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது’’ என மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் 11,12ம் வகுப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விஞ்ஞானியிடம் தங்களின் சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மா.த.விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.