திருமலை: இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் சிங்கப்பூரின் டிஎஸ்-எஸ்ஏஆர் என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதிரி செயற்கைக்கோளுடன் இஸ்ரோ இயக்குநர் ராதாகிருஷ்ணன், செயலாளர் யசோதா, உதவி இயக்குநர் ஸ்ரீனிவாசகுப்தா ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும், நினைவு பரிசாக சுவாமி புகைப்படமும் வழங்கினர்.