இந்த நிலையில், நிலச்சரிவு குறித்து விஞ்ஞானிகள், நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்தார்.வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நிலச்சரிவு தொடர்பான விவரங்களை மறைக்க கேரள அரசு முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முதலமைச்சர் பினராயி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛உத்தரவை அதிகாரிகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை தலைமை செயலாளரை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.இதையடுத்து கேரள தலைமை செயலாளர், ‛‛மாநில அறிவியல் ஆய்வுகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், மீட்பு நடவடிக்கையில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என தெரிவித்து உத்தரவை வாபஸ் பெற்றார்.