இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விற்கு எதிராக மக்களின் போராட்டம் வலுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 250க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீட்க இஸ்ரேல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே ஹமாஸ் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.