ஆனால் இஸ்ரேல் எல்லைக்குள் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்தது. அதனால் மொத்தம் 3,100 பேர் பலியானது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 900 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இவர்களில் 123 வீரர்களும் அடங்குவர். காசாவின் மக்கள்தொகை நெருக்கமான ரிமால் மற்றும் கான் யூனிஸில் 200க்கும் மேற்பட்ட இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்தியதால், அவற்றையும் தகர்த்தோம். காசாவின் முழு பகுதியில் பெரும்பாலான இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.