இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில 22 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படை தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர் என பாலஸ்தீன அதிபர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் காசாவில் எங்கும் குண்டு சத்தம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.