தாய்லாந்து: இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 21 தாய்லாந்து நாட்டவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் சிக்கியுள்ள தாய்லாந்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ட்வீட் செய்துள்ளார். படகு, விமானம், சாலை வழியாக மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டுள்ளது என ஸ்ரேத்தா தவிசின் கூறியுள்ளார். முதற்கட்டமாக 15 பேர் விமானம் மூலம் தாய்லாந்து வரவுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.