டெல்லி: இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.