ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் பல்முனை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தெற்கு காசாவில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனியர்கள் வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 280 பேர் படுகாயமடைந்தனர்.