இஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பேரணியின் போது பாலஸ்தீன மற்றும் லெபனானுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து ஹமாஸ் உடனான போரை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின் போது காசா மீதான போரை உடனடியாக நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பாகிஸ்தானில் கராச்சி மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலத்தீனத்துக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில் பாலஸ்தீனர்கள் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.