இதற்காக இஸ்ரேலில் 7 நாட்கள் பொதுவிடுமுறையும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெருசலேமில் நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். பிரேசில், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மேள, தாளங்கள் முழங்க நடைபெற்ற பேரணியில் வண்ண மையமான உடைகளுடன் பலர் பங்கேற்றனர். ஜெருசலேமில் முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதற்காக ஆங்காங்கே இணைப்பு சாலைகள் மூடப்பட்டதால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.