மேலும் இஸ்லாத்தின் கடமைகள், வழிமுறைகள், நடைமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்படும். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த எறையூர் கிராமத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தப்லீக் ஜமாத் குழுவினருக்கு இஸ்திமா என்னும் இஸ்லாமிய மாநாடு உலக நன்மைக்காகவும், அனைவரும் நலம்பெற வேண்டியும் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இஸ்லாத்தின் கொள்கை விளக்கஉரைகள், வழிமுறைகள் அனைத்தையும் கற்று பயன்பெற்றனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனையுடன் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த இஸ்திமா என்னும் மாநாடு முடிவுற்றது.