தோஷகானா வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கும் 14 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக இம்ரான்கானும், அவரது மனைவி புஷ்ரா பீவியும் திருமணம் செய்து கொண்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கான்,அவரது மனைவி புஷ்ரா பீவியிடம் நேற்று முன்தினம் 14 மணி நேரம் நீதிபதி குத்ரதுல்லா விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்ததாக கூறி தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.