“அடுத்து அந்த மனிதர், ‘ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டார். அதற்கு இறைத் தூதர், ‘இறைவனையும், வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும் நம்புவதாகும். நன்மை தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நம்புவதாகும்’ என்றார்.“அதற்கு அந்த மனிதர், ‘உண்மை கூறினீர்’ என்றார். அடுத்து, ‘இஹ்ஸான் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டார். இறைத்தூதர்,‘இறைவனை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்று வழிபடுவதாகும். அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்றார்.“வந்த மனிதர், ‘மறுமை பற்றி எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகளார்,’ கேட்பவரைவிட கேட்கப்படுபவர் அதிகம் அறிந்தவர் அல்லர்’ என்றார்.“மூன்று நாட்களுக்குப் பிறகு நபிகளார் என்னிடம், ‘உமரே, வந்தவர் யார் என்று உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘இறைவனும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று பதில் கூறினேன்.உடனே நபிகளார், “அவர்தாம் வானவர் தலைவர் ஜிப்ரீல். மார்க்கத்தின் அடிப்படைப் போதனைகளைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்.இந்த நபிமொழி “ஹதீஸே ஜிப்ரீல்” ஜிப்ரீல் அறிவித்த செய்தி என்றும் போற்றப்படுகிறது.
– சிராஜுல்ஹஸன்