டோக்கியோ: ஜப்பானில் பிரதமராக இருந்த பியூமோ கிஷிடாவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்தியது. இந்த உட்கட்சி தேர்தலில் 2 பெண்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இதில் 3 பேர் இறுதி பட்டியலுக்கு தேர்வானார்கள். இவர்களில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் நாட்டின் புதிய பிரதமராக இஷிபா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.