டெல்லி: கோவை ஈஷா மையத்தில் காவல் துறை விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஈஷா மீதான வழக்குகள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை ஈஷா யோகா -மையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.