கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் மின் தகன மேடை அமைப்பதை எதிர்த்து சுப்பிரமணியன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு அரசு, ஈஷா அறக்கட்டளை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.