ஆனால் வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தை சுட்டிக்காட்டி பூண்டை மசாலா பொருளாக அம்மாநில வேளாண் துறை அறிவித்தது. இதனை எதிர்த்து பூண்டு கமிஷன் ஏஜெண்ட் சங்கம் இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பூண்டு காய்கறி தான் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர விவசாயிகளுக்கு அல்ல என கூறி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பூண்டு அழுக கூடியது என்பதால் அது காய்கறிதான் என தீர்ப்பளித்து இருக்கின்றன. அதே நேரம் மசாலா விற்பனையகங்களிலும் பூண்டை விற்க அனுமதித்துள்ளனர். இந்த தீர்ப்பால் இரு தரப்பும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. பூண்டை இருவகையில் விற்கலாம் என்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றன.