கடந்த 7 ஆண்டுகளாக கோயிலில் வாக்கு கிடைக்காத தால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு கரிநாள் அன்று வாக்கு கிடைத்ததையொட்டி தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதை யொட்டி இன்று 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீரைபாப்பம்பட்டி பாப்பாரமாரியம்மன் கோயிலில் இருந்து ஓலைப்பட்டியில் உள்ள அம்மன் கோயில் வரை ஆள் உயர மாவிளக்கு தட்டம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஓலைப்பட்டியில் இருந்து அதே போல் மாவிளக்கு எடுத்து பாப்பார மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.