ஆனால் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலிருந்து ஈரான் தூதரை வௌியேற்றியதுடன், ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது. இந்த தாக்குதலுக்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஈரானின் சப்பார், தென்மேற்கு ஈரானில் சிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று அதிகாலை அதிரடி தாக்குதலை நடத்தின. டிரோன்கள், ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் இருந்த வீடுகள் சில இடிந்தன.
மேலும் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். “ஈரான் குடிமக்கள், ராணுவ வீரர்கள் யாரும் குறி வைக்கப்படவில்லை. அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தினோம். இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரால் வடகிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் – ஈரான் மோதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.