சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் (1730 GMT) திடீரென வாயு கசிவு ஏற்பட்டபோது, 69 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் B மற்றும் C ஆகிய இரண்டு தொகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்தனர். சி தொகுதியில் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அந்தபகுதியில் மீத்தேன் அடர்த்தி அதிகமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தபாஸில் நிலக்கரி சுரங்க வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.