ஐபிஎல் கோப்பை வெல்வது கடினம்: கங்குலி சொல்கிறார்

மும்பை: பிசிசிஐ முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான கங்குலி கூறியதாவது:- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோஹ்லி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய போது, பிசிசிஐ நிர்வாகத்திற்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அப்போது ரோகித் சர்மா தான் சிறந்த வீரராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றிருந்தார். அதனால் கோப்பைகளை வென்றிருந்த ரோகித் சர்மா சிறந்த வாய்ப்பாக எங்களுக்கு தெரிந்தார்.

ரோகித் சர்மா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்கள் டோனியும், ரோகித் சர்மாவும் மட்டும் தான். உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதை காட்டிலும், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது சவாலானது. ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடரில் 4 முதல் 5 போட்டிகளில் வென்றாலே அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் விளையாடலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 17 போட்டிகளில் விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு: அமித் ஷா

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டாக்டர் காந்திமதிநாதனை இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்