இந்த வழக்கில் கடந்த டிசம்பரில் ஆஜரான ராகுல்காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுலின் வழக்கறிஞர்கள் அவர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருப்பதாகவும் ஆஜராவதற்கு அவகாசம் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து ஜூன் 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.