விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு பீர்பாட்டில் குத்து: எஸ்எஸ்ஐ மீதும் தாக்குதல்

மேட்டூர்: சேலம் மாவட்டம், சின்னசோரகை கிராமம் வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(27) என்பவர், அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்றவாறு, ரகளை செய்து 23 வயது இளம்பெண்ணை ஆபாசமாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து அவசர போலீஸ் உதவி எண்ணில், அந்த பெண்ணின் சகோதரி நந்தினி, தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக அங்கு ரோந்து பணியில் இருந்த நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்ஐ அழகேசன், தலைமைக் காவலர் பிரசாந்த் ஆகியோர் விசாரணைக்கு சென்றனர். அவர்களை கண்டதும், என்னையா பிடிக்க வந்திருக்கிறீர்கள்? என கேட்டு சக்திவேல் பீர் பாட்டிலை உடைத்து ஏட்டு பிரசாந்தின் கழுத்தில் குத்தினார். இதில், அவர் படுகாயமடைந்தார். இதனை தடுக்க முயன்ற எஸ்எஸ்ஐ அழகேசன் மீதும் சக்திவேல் தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.

Related posts

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் 2 நாளில் பிச்சிப்பூ விலை ரூ.1000 உயர்வு!!

மூட நம்பிக்கைப் பேச்சாளரை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு… தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!!