மதுரை: செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில் ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 10 நாட்கள் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 3வது நாளாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த டிடிஎஃப் வாசனிடம் சம்மன் ஒப்படைத்துள்ளனர்.