சென்னை: நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நடிகை கவுதமி அளித்த புகாரை அடுத்து அழகப்பனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டுக்குச் சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.